academic
05 Aug
ICT Day
Celebration of information and communication technology with student activities.

Since 1943
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
“It ought to be beautiful, I live here.”
Guided by Saivite values, academic rigor, and community service, we cultivate confident young women who contribute to the world with compassion, scholarship, and leadership.
The Arasady Road entrance stands as a symbol of welcome, discipline, and the vibrant community that thrives within the campus walls.
Welcome to Jaffna Hindu Ladies College, a proud institution dedicated to empowering young women through education rooted in Hindu values, Tamil heritage, and academic excellence.
Since our founding in 1943, we have remained committed to nurturing the minds and spirits of generations of students, guiding them to become confident, compassionate, and capable leaders of tomorrow. We offer a holistic learning experience that blends tradition with progress, preparing our students for life beyond the classroom.
We invite you to explore our website to discover more about our history, diverse programs, achievements, and the vibrant school life that makes JHLC a truly special place. Whether you are a student, parent, alumna, or visitor, we are delighted to welcome you to be part of our journey.
Join us as we continue our legacy of excellence. Together, we shape the future.

அதிபரின் வாழ்த்துச் செய்தி
“அறிவால் அழகு பண்பால் பெருமை”
1943ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி தன்னுடைய நீண்ட கால வரலாற்றுடன் கூடிய கல்லூரியாகும். யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கான தரமான கல்வியை வழங்கும் ஒரு முன்னோடியான கல்வி நிலையமாக எழுச்சியும், வளர்ச்சியும் கொண்ட ஒரு கல்விக் கோயிலாக எமது கல்லூரி திகழ்கின்றது.
கல்லூரியின் நீண்டகால வரலாறு அதன் நிலைத்த தன்மை மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதை கல்விக் களத்தில் ஒரு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று தனது பிரமாண்டமான வளர்ச்சியால் யாழ்நகரில் தலை நிமிர்ந்து பெருமிதத்துடன் நிற்கின்ற கல்லூரியாக திழ்கின்றது. துறைசார்ந்த கல்வியில் மட்டுமன்றி கலை, விளையாட்டு, இணைக்கலைத்திட்ட செயற்பாடுகள் மற்றும் பல்திறன் ஆற்றல்களை வெளிப்படுத்தும் செயற்றிட்டங்கள் ஊடாக மாணவர்களின் ஆற்றல்களை வளர்த்தெடுக்கும் பணியை ஆற்றி வருகின்றது.
இக்கல்லூரி ஒழுக்கம் மற்றும் பண்பாடு போன்றவற்றைப் பேணுவதற்கு முக்கியத்துவமளித்து தொடர்ந்து செயற்பட்டு வருகின்றமை பெருமைக்குரிய விடயமாகும். மதநம்பிக்கைகளை வளர்த்தல், சர்வ மதங்களையும் மதிக்கும் மனப்பாங்கை வளர்த்தல் போன்றவற்றிற்கு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.
மாணவர்களின் தன்னம்பிக்கை, தனித்திறமை, படைப்பாற்றல் மற்றும் சமூகத்திறன்கள் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு எமது கல்லூரி செயற்பட்டு வருகின்றது. மாணவர்களால் எதிர்கால சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக் கூடிய வகையில் பல்திறன்களை உருவாக்குவதே எமது கல்லூரியின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. இத்தகைய உயரிய இலக்குகளை நனவாக்கும் வகையில் இன்றைய காலத்தில் கல்லூரியின் அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் , கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் யாவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர். குறிப்பாக கல்லூரித் தாயின் அரவணைப்பில் வளர்ந்து இன்று சிறகடித்து பறந்து பல்வேறு பிரதேசங்கள், பல்வேறு நாடுகளில் வசிக்கின்ற பழைய மாணவிகள் கல்லூரித் தாயின் உன்னத வளர்ச்சிக்கு பங்களிப்பாற்றி வருகின்றனர். அவர்களின் ஒத்துழைப்பு மேலும் பல்பரிமாணங்களில் கல்லூரித் தாய்க்கு கிடைக்கும் வகையில் ஒத்துழைக்க அழைக்கின்றேன்.
அறிவால் மேம்பட்ட ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் உயர்ந்த ஒரு தலைமுறையை உருவாக்குதல்” கல்லூரியின் உயரிய கோட்பாடாக அமைந்துள்ளது. எமது கல்லூரி 21ம் நூற்றாண்டின் சவால்களைத் திறம்பட எதிர்கொண்டு சமூக மாற்றத்திற்கு தூணாக விளங்கும் அறிவும் ஆற்றலும் மிக்க பெண்மணிகளை உருவாக்குவதை உயரிய கோட்பாடாகக் கொண்டு இன்றை நவீன காலத்திற்கேற்ப செயற்பட்டு வருகின்றமை பாராட்டுக்குரிய விடயமாகும். இச் செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் கல்லூரியின் ஆசிரியர் குழாத்தின் உன்னதமான பணிச்சிறப்பை இவ்விடத்தில் பாராட்டுகின்றேன்.
கல்லூரித் தாயின் பல் பரிமாணங்களை உலகறியச் செய்வதற்கு ஏற்றவகையில் எமது கல்லூரியில் கற்று 1995 ஆம் ஆண்டு வெளியேறிய மாணவர்கள் ஒன்றிணைந்து 2026ஆம் ஆண்டில் தமது ஐம்பதாவது அகவை நிறைவை முன்னிட்டு கல்லூரிக்கென உரித்தான இணையத்தளத்தினை உருவாக்கித் தந்துள்ளனர். இவர்களுடைய இந்த உயரிய பணிக்காக அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றேன். இவர்களுடைய பணி இத்துடன் நின்றுவிடாது மேலும் தொடரவும் வாழ்த்துகின்றேன்.
IT OUGHT TO BE BEAUTIFUL, I LIVE HERE.
செல்வி.சுமதி கந்தசாமி
அதிபர்
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

Mrs. Visaladchy Ammal Sivagurunathar
Philanthropist and visionary who gifted the Naduththoddam estate, making the college a sanctuary for learning and faith.
A heartfelt collection of blessings and reflections shared by the leaders and teachers who shaped our journey.
View the wishesUpcoming academic milestones, cultural observances, and community events.
academic
05 Aug
Celebration of information and communication technology with student activities.
academic
07 Aug
First break of the third term for students and staff.
Latest posts and updates from our official Facebook page.
Explore the projects and facilities we hope to build with community support to create the best learning environment for our students.
View future needsExplore OGA chapters, campus facilities, and resources curated for students and families.